Friday, March 5, 2021

முள் குத்திய ரோஜா பகுதி - 1

 ஹலோ.. என்னைத் தெரியல.. ?”

எனக் கேட்ட அந்தப் பெண்ணை நான் வியப்புடன் பார்த்தேன். அவள் கண்கள் என்னை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தன. என்னுடன் அவள் பல நாட்கள் பழகியவள் போல.. என் முன்னால் எனக்கு நெருக்கமாக நின்று உதட்டில் தவழும் புன்னகையுடன் கேட்டாள்.. !!


நான் குழப்பத்துடன் அவளை உற்றுப் பார்த்தேன். அவள் முகத்தில்.. என்னிடம் அவளுக்கு இருக்கும் உரிமையை பறை சாற்றுவது போல.. அப்படி ஒரு மலர்ச்சியும்.. கனிந்த அன்பும் தெரிந்தது. ஆனால் எனக்குத்தான் அவள் யாரென்று தெரியாமல் மூளை குழம்ப யோசித்துக் கொண்டிருந்தேன்.. !!


” ஸ்ஸாரி…” எனத் தடுமாறியபடி அவள் கழுத்தில் அவளது அடையாளத்தை தேடினேன். ஒரே ஒரு தங்கச் சங்கிலி மட்டும்தான் இருந்தது. தாலி என்கிற அடையாளம் தென்படவில்லை.. !


” ம்ம்.. ! சரிதான்.. என்னையெல்லாம் உங்களுக்கு சுத்தமா நாபகமில்லேனு தெரியுது.. !” எனச் சிரித்த அவளின் ஈர இதழ்கள்.. கவர்ச்சியாய் இருந்தது. மெலிந்த அந்த இதழ்கள் மிகவும் க்யூட்டாக இருந்தன.


நீள் வட்ட முகம் கொண்ட இவ்வளவு அழகான ஒரு பெண்ணுக்கு என்னைத் தெரிந்திருக்கும் போது எனக்கு மட்டும் எப்படி இவளை தெரியாமல் போனது.. ?? என்னுடன் படித்தவளா. ? என் வகுப்பா..? இல்லை என் ஊர்.. உறவுக்காரியா.. ? சில நொடிகளில் எல்லா வகையிலும் யோசித்துக் குழப்பித் தவித்தேன்…!!


” மிஸ்.. உங்க நேம்.. ?”


” நிலாவினி.. !! ” வெகு இயல்பாக சிரித்துக் கொண்டே சொன்னாள்.


” நிலாவ்வினி.. ???? நைஸ் நேம்.. பட்… ”


” புரியுது. உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலேன்னு..! இட்ஸ் ஓகே. ரொம்ப போட்டு உங்க பிரெய்ன குழப்பிக்காதிங்க.. !!”


” ஸ்ஸாரி.. ! நெஜமா எனக்கு தெரியல. நீங்க யாருனு சொன்னிங்கனா.. ?”


” இட்ஸ் ஓகே. ! அதை இப்படி நின்னுட்டேதான் பேசணுமா. ? வாங்களேன் ஒரு காபி சாப்பிட்டே பேசலாம்..” என்றாள்.


இவ்வளவு தூரம் உரிமை உள்ளவளா..? யாராக இருக்கும்.. ? என் மனைவியின் தோழியோ.. ? இல்ல உறவுக் காரியோ.. ??


மெதுவாக தலையாட்டி விட்டு.. அவளுடன் இணைந்து நடந்தேன். மெரூன் கலரில் இருந்த அவளின் சுடிதார் துப்பட்டா அவள் நடக்கையில் என் மீது வந்து இயல்பாகப் பட்டு விலகியது.. !!


மாலை நேரம் என்றாலும் இன்னும் சூரியன் மறையவில்லை என்பதால்.. அந்த ரெஸ்டாரண்ட் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருந்தது. ஒரு ஓரமாகச் சென்று எதிரெதிரே அமர்ந்தோம். அவள் மீதிருந்த வியப்பு எனக்கு இன்னும் குறையவில்லை. இரண்டு காபிகளுக்கு மட்டும் ஆர்டர் கொடுத்து விட்டு நான் அவளைப் பார்த்தேன்.. !! பளிச்சென இருந்த அவள் முகம் அவ்வளவு அழகாக இருந்தது. அந்த முகத்தைப் பார்த்த போது.. என் மூளையில் அவள் முகம் எஙகோ ஒரு மூலையில் பதிவாகி இருப்பதை என்னாலும் உணர முடிந்தது. ஆனால்.. எங்கே என்றுதான் தெரியவில்லை.. !!

நிலாவினி.. !! பெயர் மட்டும் அல்ல.. அவளும் அழகாகத்தான் இருக்கிறாள்.. !! ஆனால் யாரிவள்.. ?? என்னை நன்றாக தெரிந்ததைப் போல பேசுகிறாள். பழகுகிறாள்.. !! ஆனால் எனக்கு இவளை சுத்தமாகத தெரியவில்லை.. !!




நிலாவினி ஒரு ஐந்தடி உயரம்தான் இருப்பாள் போலிருந்தது. அதற்கும் குறைவான உயரமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இளமையான தோற்றம். அவளின் கூடுதல் நிறத்தை பளிச்சென எடுத்துக் காட்டும் விதமாக.. மெல்லிய ரோஸ் நிற இதழ்கள். சின்னக் கண்கள். அளவான நெற்றி. இரண்டு புருவங்களுக்கு இடையில் குட்டி பொட்டு. காதில் தொங்கும் அழகான கம்மல்கள். சுருட்டை முடி.. !! கவர்ச்சியான இதழ்களுக்கு மேலே கூரான நாசி. அழகான பல் வரிசை. பச்சை நரம்புகளின் வரிகளை காட்டும் அழகான கழுத்து. கழுத்தில் ஒற்றை செயின். தொண்டைக்குழி மிக அழகு. சற்று உள் அமுங்கி.. தட்டையாகப் படர்ந்த நெஞ்சு. அதன் இரண்டு பக்கத்தில் குபுக்கென விரிந்து.. அதிரடியாய் புடைத்து நிற்கும் இரண்டு இளமையான பெண் கலசங்கள். அந்த ககசங்களின் எழுச்சியில் தளர்ச்சி இருப்பது போல் தெரியவில்லை. அதனை மறைக்கும் நேர்த்தியான உடை அமைப்பு. எந்த ஒரு ஆணையும் அடித்து வீழ்த்தும்.. அழகு அவளின் பெண்மையிடம் இருந்தது.. !!


” என்ன அப்படி ஒரு ஆராய்ச்சி.. ? என்னை யாருனு தேடிட்டு இருக்கிங்களா.. ?” ஈர இதழ்கள் மலர.. அவள் செய்த புன்னகையில் என தடுமாற்றத்தை என்னால் மறைக்க இயலவில்லை.. !!


” ம்ம்.. ஆமா.. எவ்வளவு யோசிச்சாலும் நீங்க என் மூளைல ஸ்கேன் ஆக மாட்டேங்குறிங்க.. ”


மெல்லிய புன்னகை காட்டினாள். அவளது இரண்டு கைகளையும் மடக்கி வைத்து.. தனது அழகான இளம் கொங்கைகளை அதன் பின் ஒளித்தாள். சிறிது முன்னால் வந்தாள்.. !!


” உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு இல்ல.. ?”


” ம்ம் ” தலையை ஆட்டினேன்.


” எத்தனை குழந்தைங்க.. ?”


” ரெண்டு பசங்க.. ”


” என்ன படிக்கறாங்க.. ?”


” பர்ஸட் ஒண்ணு.. எல் கே ஜி ஒண்ணு.. ! உங்களுக்கு.. ?”


குனிந்து சிரித்தாள்.

” ம்ம்.. சொல்லுங்களேன் பாப்போம் இவ்வளவு நேர ஆராய்ச்சில.. என்னை பத்தி என்ன கணிச்சிருக்கீங்க.. ?”


” நத்திங்.. ! நீங்களா சொல்லிடறது பெட்டர்.. !!”


மெல்லக் கண் சிமிட்டிச் சிரித்தாள். என் மீது அவள் வீசிய பார்வையும் என்னிடம் அவள் காட்டிய புன்னகையும்.. இப்போதும் எனக்கு நெருக்கமான ஒரு உணர்வை தோற்று வித்தது.. !!

‘ச்சே.. போன ஜென்மத்தில் இவளை எங்காவது காதலித்து தொலைத்து விட்டோமோ..?’


காபி வந்தது. புன்னகை மாறாமலே காபியை எடுத்து பருக ஆரம்பித்தாள்.


நான் காபியை எடுக்காமல் அவள் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தேன்.


” ம்ம்.. என்னைவே சைட்டடிச்சது போதும். காபியை எடுத்துக்கோங்க.. ” சிறிது காபியை பருகியபின்.. என்னைப் பார்த்துக் கொஞ்சம் கேலியாகச் சிரித்தபடி காபி கப்பை மேஜை மீது வைத்தாள்.


நான் கொஞ்சம் அசடு வழிந்தேன். இளித்தபடி அவள் முகத்தில் இருந்த பார்வையை மாற்றி காபியை எடுத்தேன்.

” ஸ்ஸாரி…”


” ம்ம்.. ! நான் எப்படி இருக்கேன்.. ??” அவள் உதட்டில் குறும்புப் புன்னகை.


முன் பின் பழக்கமில்லாத எந்தப் பெண் இப்படிக் கேட்பாள். ?

” ஸாரி. நான் உங்களை சைட் அடிக்கலே.. யாரு இந்த அழகினு யோசிச்சிட்டிருக்கேன்.. ”


” ஓஹ்.. ” சிரித்து முன்னால் மடங்கினாள் ”ஸோ நான் அழகா இருக்கேன்.. ?”


” யெஸ்ஸ்.. ”


”ரொம்ப அழகா.. ?”


” உண்மைய சொன்னா.. ம்ம்ம்ம்.. அதை எப்படி சொல்ல.. ? சான்ஸே இல்ல.. அவ்ளோ அழகு. !” இப்போது என் ஆண்மை புடைக்க ஆரம்பித்தது.


” ஆஹ்ஹாஹ்.. !!” அவள் சிரிப்பில் அவளின் நெஞ்சு மெல்லக் குலுங்கியது. முகத்தில வெட்க ரேகை பரவி.. உடனே மறைந்தது. உதடுகள் வாய்க்குள் ஒளிந்து பின் மீண்டன. அவள் கண்கள்……


‘ச்ச.. என்ன இது.. ? நான் இப்படி மாறி விட்டேன். என்னைப் பற்றி அவள் என்ன நினைப்பாள்.?’ ஆனால் என் தொடைகளுக்கு இடையில் உஷ்ணம் பரவ ஆரம்பித்தது. என் ஆண்மை அதிங ரத்த ஓட்டத்தை அடைந்தது. !! எனா தொடைகளை சற்று அகட்டி.. பின் இணைத்தேன்.. !!


” பட்.. இந்த அழகான பொண்ணு யாருங்கற கேள்விதான் என் மண்டையை கொடையுது.. தெண்ண மரத்து வண்டு மாதிரி.. !!” எனச் சொல்லி விட்டு மெதுவாக காபியை உறிஞ்சினேன்.. !!


” ச்சோ ஸ்வீட். உங்க வொய்ப் வெரி லக்கி. ம்ம்.. என்னைப் பத்தி தெரியாமலா போய்ட போகுது.. ? நொ வொர்ரி.. !! செமையான பொண்ணு ஒருத்தி உங்க முன்னால உக்காந்து.. உங்களுக்கு கம்பெனி குடுத்திட்டிருக்கா. வித் காபி.. !! எவ்வளவு ஜாலியா கல்லை வறுக்கலாம்.. ? அதை விட்டுட்டு தெண்ணை மரம்.. வண்டு.. தவக்களை எல்லாம் தேவையா. ?” என்று சிரித்தாள். மீண்டும் காபி கப்பை எடுத்து உதடுகளுக்கு இடையில் கொடுத்தாள்.

” இல்ல… இந்த அழகி யாருங்கறது தெரிஞ்சிட்டா அதுக்கு தகுந்த மாதிரி பேசலாம்.. ”


” ம்ம்.. ! இந்த அழகியை விட மாட்டிங்க போல.. ?”


என்னடா வம்பு என்று தோன்றியது எனக்கு. அவளை தவறான பெண்ணாகவும் நினைக்க மனம் வரவில்லை.

” ப்ளீஸ்…” என்றேன்.


காபியை உறிஞ்சி விட்டு கீழே வைத்தாள். அவள் கைகள் இரணாடையும் இணைத்து எனக்கு நேராக வைத்தாள். லேசாக முன்னால் வந்து கேட்டாள்.

” சித்ரா நாபகமிருக்கா.. ?”


” சித்ரா.. ?? ம்ம்ம்ம்.. !! எந்த சித்ரா.. ??”


” எத்தனை சித்ரா தெரியும் உங்களுக்கு.. ??”


” சிங்கர் சித்ரா தவிற.. வேற யாரும் நாபகமில்லே.. !!”


” ஸோ ஸேடு..! அவ கேள்விப் பட்டானா.. ரொம்ப ரொம்ப பீல் பண்ணுவா.. ?”


” எவ.. ? ஸாரி.. ! யாரு..?”


” சித்ரா.. ! மை ஸிஸ்டர். என் அக்கா.. !”


” வெரி ஸாரி.. ! நெஜமா.. எனக்கு நாபகம் வரல..! இன்னும் கொஞ்சம் தெளிவா.. புரியற மாதிரியே சொல்லிருங்களேன்.. ப்ளீஸ்.. ” என்றேன்.


அவளது அக்கா யாரெனத் தெரியாமல் தவிப்பது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.


” ஓகே.. ! ஒன் செக்.. !!” என்று விட்டு அவளது பர்ஸை எடுத்து ஜிப் பிரித்தாள். நான் அவளது விரல் அசைவுகளையே ஆர்வம்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். பர்ஸில் இருந்த தனது மொபைலை எடுத்தாள். அவளின் வெண்டை விரலால் பேட்டர்ன் வரைந்தாள். சரக் சரக்கென தள்ளி விட்டு கேலரியில் இருந்த அந்த போட்டோவைக் காட்டினாள். !!


” ஸீ.. சித்ரா.. !! மை ஸ்வீட் ஸிஸ்டர்.. !!”


அதை வாங்கிப் பார்த்த எனக்கு கண்ணைக் கட்டியது ….


” ஸீ சித்ரா..!! மை ஸ்வீட் ஸிஸ்டர்.. !!” என்று நிலாவினி காட்டிய மொபைல் கேலரியில் இருந்த அந்த குண்டுப் பெண்ணை.. சுத்தமாக எனக்கு யாரென தெரியவில்லை.. !!

அந்தப் பெண் நல்ல நிறமாக.. கொஞ்சம் குண்டாக உப்பிய கன்னங்களும்.. சிவந்த உதடுகளுமாக அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள். இவள் சாயல் அப்படியே தெரிந்தது. ஆனால் கூடுதல் உடம்பு. அவளைப் பார்த்த போதும் எங்கோ பார்த்த நினைவுதான். ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை.. !!


” ம்கூம்.. ! ஸோ ஸாரி..!!” மிகுந்த மனக் குழப்பத்துடன்.. எனக்கு முனனால் உட்கார்ந்து என்னை ஆவலாகப் பார்த்தவளை.. ஏறிட்டுப் பார்த்து குறுக்காக தலையை ஆட்டினேன்.


அவள் உதடுகளில் நெளிந்து கொண்டிருந்த குறுஞ் சிரிப்பை விலக்காமல்.. இன்னும் சில போட்டோக்களை நகர்த்தி நகர்த்திக் காட்டினாள். எல்லாம் குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்கள். அவளின் கணவனுடனும் குழந்தைகளுடனும் மகிழ்ச்சிராயாக இருக்கும் போட்டோக்கள்.. !!


” ஸாரிங்க..! யோசிச்சு யோசிச்சு.. எனக்கு மண்டைக்குள்ளா சூடாகி.. மூளை கொதிக்கற மாதிரி இருக்கு.! பட்.. யாருனே தெரியல.. !!”


” ஹ்ம்ம்.. என்ன ஆளுப்பா நீங்க.. ?” எனச் சிரித்து விட்டு மொபைலை எடுத்து வைத்தபடி என்னைப் பார்த்தாள். மார்புகள் எழுந்து அடங்க.. ஒரு பெருமூச்சு விட்டாள்.

” அவ முகம் கூட.. எங்கயாவது பாத்த மாதிரி தோணலியா.. ?”


” ம்ம். ! அது உங்க முகத்த பாத்தப்பவே தோணுச்சு. பட் எங்கேனுதான் ஒண்ணும் பிடி பட மாட்டேங்குது. !!”


” ஸோ ஸேடு..” என்று புன்னகைத்தாள்.


” ஸாரி…”


”ஹ்ம்ம்.. ஒரு காலத்துல அவ உங்களை லவ் பண்ணா.. ” என்றாள்.


எனக்கு அதிர்ச்சயாக இருந்தது.

” வாட்.. ?”


” ம்ம்.. ! அவ உங்களை அவ்ளோ டீப்பா லவ் பண்ணா. நீங்களும் அவளை விரும்பினதா சொன்னா.. !” என்று அவள் சொல்ல என் குழப்பம் இன்னும் அதிகமாகி முடியை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது.. !!


” என்ன சொல்றிங்க..? லவ் பண்ணோமா.. ? நாங்களா.. ? எனக்கு தெரியாம எப்படி. ? எந்த காலத்துல நாங்க லவ் பண்ணோம்.. ?”


” ம்ம்.. ! பயங்கர மெமரி பவர் உங்களுக்கு. ! நீங்க எங்க வீட்டுக்கு எல்லாம் வந்துருக்கிங்க.. எங்க பேமிலில எல்லார் கூடயும் பழகிருக்கிங்க.. !!” என்று அவள் சிரித்தாள்.


” மை காட்.. ! புதுசா புதுசா கதை சொல்றிங்களே.. ? எந்த ஊர்ல.. ? என்ன வயசுல. ? கொஞ்சம் விலாவாரியா சொல்லிருங்க. இதுக்கு மேலயும் என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியாது. ப்ளீஸ்.. !!”


”ஹ்ஹா.. இது சஸ்பென்ஸ் இல்ல.. க்ளூ.. ”

” சரி.. க்ளு.. ! பட் எனக்கு எதுவும் நாபகம் வரல. சொல்லிருங்க.. ப்ளீஸ்.. ” நான் கெஞ்சிக் கேட்க.. புன்னகை மாறாமலே சொன்னாள்.




நீங்க டென்த்வரை எந்த ஸ்கூல்ல படிச்சிங்க.. ?”


” கவர்மெண்ட் ஹையர் செகண்டர்ர்ரிரீ… ஸ்கூல்ல்ல்…” யோசித்துக் கொண்டே அவளுக்கு பதில் சொன்னேன்.


” அப்போ.. உங்களுக்கு ஒரு கேர்ள் பிரெண்டு இருந்தா.. ! நாபகமிருக்கா.. ? கொஞ்சம் லீனா.. வாயாடியா.. ??”


” ஓஓ.. ஷிட்.. !! மை காட்… மை காட்ட்.. ” எனக்கு நினைவு வந்து விட்டது. ” ஸாரி.. ஸாரி.. எக்ஸ்ட்ரீம்லி ஸாரி.. ! சித்ரா.. யெஸ் ஐ காட் இட்.. சித்ரலேகா..ரைட்.. ??”


” எஸ்.. ப்பா.. ”


” ஓகே. ரியலி ஸாரி நிலா.. ! நிலா.. நிலா.. மை காட். எப்படி மறந்தேன் உங்க பேரு எல்லாம். ? பேர கேட்டாலே எனக்கு டக்குனு நாபகம் வந்திருக்கணும்.. ! ஸோ ஸாரி. !! அப்ப.. நீங்க.. பாவாடை சட்டை போட்டுகிட்டு.. க்யூட்டா.. பட் வேற ஸ்கூல் இல்ல.. ? ஸாரி.. ! உங்கப்பா அம்மா எல்லாம் நல்லாருக்காங்களா.. ? உங்கக்கா.. சித்ரா எப்படி இருக்காங்க. ? அவங்க ஹஸ்பண்ட்.. குழந்தைங்க எல்லாம் பாக்க நல்லாருக்காங்க.. !!”


” யப்பா.. ஒரு நூல் கெடைச்சதும் என்னைக் கூட நாபகப் படுத்திட்டிங்களே.. ? ரொம்ப சந்தோசம். இப்ப டவுட் க்ளியரா.. ??”


” வெரி க்ளியர்.. !! ஸோ ஹேப்பி.. !! என்னோட சுகமான நினைவுகள கிளறி விட்டதுக்கு.. கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும். !!” நான் பரவசத்தில் தினறியபடி சொன்னேன்.


அவள் சிரித்தாள்.

” உங்களை பாத்ததுல எனக்கும் ரொம்ப சந்தோசம்.. !!”


” அது சரி.. ஆனா இவ்ளோ நாள் கழிச்சு.. என்னை மட்டும் எப்படி கரெக்ட்டா அடையாளம் கண்டு புடிச்சிங்க. ? நாம பாத்தே பல வருசம் ஆச்சு. அதும் சின்ன வயசுல பாத்துகிட்டது. அப்ப நீங்க பாவாடை சட்டை… நான் மீசை இல்லாத முகம்.. ??”


” ஹ்ஹா.. ஹா.. ! யெஸ்.. ஐ அக்ரி வித் யூ.. !! பட்.. நான் ஈஸியா கண்டு புடிச்சுட்டேன். உங்க மீசைக்கு கீழ.. உதட்ல.. ஒரு மச்சம் இருக்கே.. அது எனக்கு மறக்கவே இல்ல. அதுதான் இப்ப எனக்கு உங்களை அடையாளம் காட்டுச்சு.. !! ஆனா பேரு மட்டும் சடனா நாபகம் வரல. கொஞ்சம் யோசிச்சப்ப.. லிங்கம்னு தோணுச்சு. அப்பறம் அந்த பேரு இலலையேனு யோசிக்க.. நிருதி லிங்கம்னு உங்க புல் நேம் க்ளிக்காச்சு.. !!” என்று சொல்லி விட்டு அவளது வலது கையை என்னை நோக்கி நீட்டினாள்.

” அயாம் நிலாவினி..! உங்க எக்ஸ் கேர்ள் பிரெண்டோட தங்கச்சி.. !! கிளாட் டூ மீட் யூ.. !!”


நான் அவள் கையைப் பற்றி அழுத்திச் சொன்னேன்.

” எனக்கே.. என்னை அடையாளம் காட்னதுக்கு ரொம்ப நன்றி..”


அதன் பின்.. சுருக்கமாக.. அவளது குடும்ப விவரம்.. எனது குடும்ப விவரம் எல்லாம் பேசிக் கொண்டோம். இதற்கிடையில் என் மனைவியிடமிருந்து கால் வந்தது. பிக்கப் செய்து பேசினேன்.. !!


” அப்பறம். ??” என் மனைவியுடன் பேசி முடித்து.. என்னையே பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தவளைப் பார்த்துப் புன்னகைத்தேன்.


” ம்ம்.. ? அப்றம்.. ?” கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்தாள்.


காபி முடிந்திருந்தது. ஆனால் அவளுடன் இன்னும் நிறைய பேச வேண்டும் போல என் மனம் ஒரு தவிப்பை அடைந்திருந்தது.


” சித்ராவை ரொம்ப கேட்டதா சொல்லுங்க நிலா..”


” ஒரு சின்ன ரிக்வெஸ்ட்..”


” ம்ம்.. சொல்லுங்க. ?”


” இந்த.. ‘ங்க’ வேண்டாம். கால் மீ நிலா. நான் உங்களை விட.. மூணு வருசம் பக்கம் சின்னவ.. !!”


” ஓககே.. ”


” தேங்க்ஸ்.. ”


” சரி.. நீ எங்க இருக்க இப்ப.. ?”


” பாட்டி வீட்ல.. ” அவள் புன்னகை விரிந்தது. ”நானும் பாட்டியும் மட்டும்.. ”


” ஏன்.. அப்பா அம்மா.. ??”


” ம்ம். இருக்காங்க. ! அக்கா வீட்டு பக்கத்துலயே.. ! நான் மட்டும் இங்க பாட்டிக்கு துணையா.. இருக்கேன்.. !!”


” ஜாபுக்கு ஏதாவது போறியா என்ன.. ?”


” ம்ம்.. போறேன்.! ஒரு கார்மெண்டாஸ்க்கு. இப்ப.. நான் டூட்டி முடிஞ்சுதான் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிட்டு போலாம்னு வந்தேன். வந்த எடத்துல சர்ப்ரைசிங்கா.. உங்களை பாத்துட்டேன்.. !!”


” எனக்கும் உன்ன பாத்தது சந்தோசம்தான். ! சரி உன் வீடு எங்க இருக்கு இப்ப.. ?”


அவள் ஏரியாவைச் சொன்னாள். அவளது போன் நெம்பரைக் கொடுத்து என் நெம்பரை வாங்கிக் கொண்டாள். அப்பறம் நேரம் ஆவதை உணர்ந்து எழுந்து வெளியே வந்து கை குலுக்கி கிளம்பியபோது.. என் மனது எங்கோ மிதப்பதைப் போலிருந்தது.. !!


இவளது அக்கா.. சின்ன வயசு சித்ரா.. என் மனம் முழுவதும் வியாபித்திருந்தாள். அந்த வயதில் அவள்தான் என் இதய தேவதை..! அப்போது எவ்வளவு அழகாக இருந்தாள் அவள்.. !! ஹூம்.. வெளியே சொல்லாமல்.. எனக்குள்ளேயே புதைந்து போன காதல் அது.. !! ஆனால்.. ஆனால்.. நிலாவினி என்ன சொன்னாள். ? நாங்கள் காதலித்ததாக… அல்லவா சொன்னாள்.. ?? மை காட்…! எப்படி..? அதை நான் என் நண்பர்களிடம் கூட சொன்னதில்லையே.. ?? சித்ராவும் என்னை விரும்பியதாக அல்லவா நிலாவினி சொன்னாள். ?? அப்படியானால்… அப்படியானால்…..


‘அட.. ச்ச.. ! நான் விரும்பியதை எப்படியோ தெரிந்து கொண்டு அவளும் என்னை விரும்பியிருக்கிறாள்.. !! இந்த விசயம் தெரியாமல் நான் பல நாள் தூங்காமல் தவித்தேனே.. ? ஒருவேளை அவளிடம் நான் வந்து காதலைச் சொல்வேன் என்று எதிர் பார்த்துக் காத்திருந்தாளோ…?? சொல்லியிருந்தாள்.. அவள் எனக்கு கிடைத்திருப்பாளோ.. ? இப்போதும் எவ்வளவு அழகாக இருக்கிறாள்.. ?? தன் காதலை தங்கையிடம் சொன்னவள்.. என்னிடம் சொல்லியிருக்க கூடாதா.. ? ஜாடை மாடையாகவாவது.. ??’


எனது எண்ணச் சிந்தனைகளில் உழன்றபடி நான் எனது வீட்டை அடைந்தேன். வழக்கம் போல என் மனைவியின் புலம்பல்கள் நச்சரிப்புகள்.. அலட்சிய பேச்சுக்களில்.. எல்லாம் பாதிக்கப் பட்ட என் மனசு.. சித்ராவை நினைத்து.. தனது சுகத்தை தேடிக் கொண்டது.. !!


இரவு வாட்ஸ் அப் ஓபன் பண்ணியபோது நிலாவினி நெம்பரில் இருந்து அழகான ஒரு குழந்தை படத்துடன் குட்நைட் மெசேஜ் வந்திருந்தது. அதைப் பார்த்த உடனே நான் அவளுக்கு ஒரு குட்நைட் அனுப்பி வைத்தேன்.. !! அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கே குட்மார்னிங் அனுப்பியிருந்தாள். நான் ஆறரை மணிக்கு எழுந்து அவளுக்கு குட்மார்னிங் அனுப்பினேன். இது எல்லாம் நான் என் மனைவிக்கு தெரிந்து அனுப்ப முடியாது. தெரியாமல்தான் அனுப்பி வைத்தேன்.. !!


அவளது வாட்ஸ் அப் டிஸ்பிளேவில்.. ஒரு குழந்தை படத்தை வைத்திருந்தாள். சின்ன குழந்தை அழகாய் இருந்தது. அதை யாரெனக் கேட்டேன். அவள் எட்டரை மணிக்கு அதற்கு பதில் சொல்லியிருந்தாள்.!


‘சித்ரா பொண்ணு..! ரெண்டு வயசு அப்போ.. !’


நான் டீ டைமில் அதைப் பார்த்து விட்டு அவளுக்கு ரிப்ளே செய்தேன்.

‘ரொம்ப அழகா இருக்கு ‘


மதியம் லஞ்ச் பிரேக்கில் அவள் எனக்கு பதில் அனுப்பியிருந்தாள்.

‘தேங்க்ஸ்..!’டிபி மாத்தியிருந்தாள். இப்போது பையன். ‘அவ பையன் ‘ என்று அவளே சொல்லியிருந்தாள்.


‘ ரெண்டு குழந்தைகளும் லட்டு மாதிரி இருக்கு.’ நான் அனுப்ப.. உடனே ரிப்ளே வந்தது.


‘ தேங்க்ஸ்.. ! உங்க குழந்தைங்கள நான் பாக்கலாமா..? வித்.. அவங்ம்மாவோட.. ?’ ஸ்மைலி. !


நான் எனது குடும்ப போட்டோவை அனுப்பினேன்.


‘ரொம்ப அழகா இருக்கு. ஐ லவ் யூ ஆல்..!’ என்று அனுப்பினாள்.


‘ தேங்க்ஸ்.. !’


‘ வாட் யூ டூ ?’ சுருக்கமாக கேட்டாள்.


‘ லஞ்ச்.! நீ ?’


‘ ம்ம். சாப்பிட்டாச்சு. ! நைட் மெசேஜ் பண்றேன். பை !’ என்று அவசரமாக முடித்திருந்தாள்.


‘ ஓகே பை ‘ சொல்லி விட்டு நானும் எனது அலுவலை கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் என் மனசெல்லாம் சுகமான நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தது …… !


இரவு பத்து மணிக்கு நான் படுக்கைக்குப் போய் என் மொபைலை எடுத்து வாட்ஸப்பை ஓபன் செய்தேன். நிலாவினி எனக்கு..

‘குட்நைட் ‘ சொல்லியிருந்தாள். இரண்டு அழகான குருவி படங்களுடன்.! அவள் எனக்கு அனுப்பி ஒரு மணி நேரம் ஆகியிருந்தது


No comments:

Post a Comment