Thursday, March 25, 2021

அவள் பெயர் ஆர்த்தி பகுதி - 8

நேத்து நைட்லேர்ந்துங்க.”


” நான் காலைல கேட்டப்ப ஏன் சொல்லல.. ?”


வெறுமனே புன்னகைத்தான். அருகில் போய் அவன் நெற்றியைத் தொட்டாள். லேசான காய்ச்சல் அல்ல. நன்றாகவே காய்ச்சல் அடித்தது.


” இது லேசான காச்சலா.. ? நல்லாவே சுடுது..!”


” ம்ம் ” புன்னகைத்தான்.


” ஆஸ்பத்ரி போனிங்களா.. ?”


” இல்ல.. மெடிக்கல்ல ரெண்டு செட் மாத்திரை வாங்கிட்டு வந்து போட்டேன்..! இவ்ளோ நேரம் நல்லாதான் இருந்த மாதிரி இருந்துச்சு. இப்பதான் லைட்டா.. அதிகமாகியிருக்கு.. !”


” ஏன்.. என்னை பாத்ததுலயா ?”


” ச்சே.. அப்படி எல்லாம் இல்லைங்க.. ”


” சாப்பிட்டிங்களா ?”


” ம்ம் !”


” என்ன சாப்பிட்டிங்க. ?”


” பிரெட்டு ”என்று ரொட்டியைக் காட்டினான் ”டிபன் எதுவும் வாய்க்கு புடிக்கல..”


” எப்ப சாப்பிட்டிங்க. ?”


” பத்து.. பத்தரை மணி இருக்கும்..”


” இப்ப லஞ்ச் டைம்.. ”


” இல்லங்க.. எனக்கு பசியே இல்ல.! சாப்பிடுற எண்ணமும் இல்ல.. !!”


” காச்சலுக்கு பட்டினி நல்லதுதான். ஆனா அதுக்காக ஒண்ணுமே சாப்பிடாம இருக்காதிங்க.. !”


” ம்ம்.. பிரெட் அப்படியதான் இருக்கு.”


” சாயந்திரம் ஆஸ்பத்ரி போய் ஒரு ஊசி போட்டுட்டு வாங்க.. இப்படி மொடங்கி கெடக்காம.. ”


” ம்ம்.. ”


” இப்ப ஏதாவது வேணுமா ?”


” இல்ல.. ஒண்ணும் வேணாம் ”


” தண்ணி..? சுடு தண்ணிக்கு என்ன செஞ்சிங்க.. ?”


” பேக்கரில இருந்து ஒரு வாட்டர் கேன் வாங்கிட்டு வந்தேன்.. ”


” ஏன்.. என்கிட்ட கேட்றுந்தா நான் சுடு தண்ணி வெச்சு தந்துருக்க மாட்டனா.. ?”


” இல்ல.. உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்னு..”


” அப்ப.. என்னை பகையாளியாத்தான் நெனைக்கறிங்க. ? மறுபடி அடிப்பாளோனு..?”


” ச்ச.. அப்படி இல்லைங்க.”


” சரி.. பரவால்ல. இருங்க.. சுடு தண்ணி கொண்டு வந்து தரேன்..! டீ காபி ஏதாவது குடிக்கறிங்களா..?”


” இல்லங்க.. வேணாம். வாய்க்கு எல்லாம் கசப்பாவே இருக்கு..”


” ம்ம்.. இருங்க வரேன்..” என்று வெளியேறி மாடிக்குப் போய் துணிகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.


ஆர்த்திக்கு உண்மையில் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. தன்னால்தான் அவனுக்கு காய்ச்சல் வந்ததோ என்று கூட நினைத்தாள். அடுப்பில் இரண்டு பாத்திரங்களை வைத்தாள். ஒன்றில் தண்ணீர்.. இன்னொன்றில் கஞ்சி.. ! தண்ணீரை வைத்து விட்டு.. பாத்ரூம் போய் நன்றாக முகம் கழுவினாள். ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று சன்னமாக.. உறுத்தாத அளவுக்கு மேக்கப் செய்து கொண்டாள். நைட்டியில் அவள் முலைகள் எடுப்பாக தெரிவதைப் போலிருந்தது.. !


தண்ணீர் நன்றாக கொதித்து விட்டது. அதை எடுத்து பேன் காற்றில் வைத்து விட்டு இன்னொரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவிப் போட்டாள். அதன் பின்.. பேன் காற்றில் கொஞ்சம் சூடு குறைந்திருந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு மேலே போனாள். ! முதலில் இப்போது அவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க நினைத்தாள். அதன் பின் கஞ்சி. ! இந்த முறை.. நைட்டிக்கு மேல் மார்பில் துப்பட்டா போட்டிருந்தாள். !!


நிருதி எழுந்து உட்கார்ந்தான்.

” உங்களுக்கு வீண் சிரமம்..”


அவனை முறைத்து விட்டு தண்ணீரை பேன் காற்றில் வைத்தாள்.

” பால் குடிக்கறிங்களா ?”


அவன் பார்வை சட்டென அவள் முலைகளின் மேல் பாய்ந்தது.


” அலோவ்.. என்ன.. ? இந்த பால் இல்ல.. ”


” ஐயோ ஸாரிங்க.. நான்.. ”


” ம்கூம்.. புத்தி ஒண்ணும் செரியில்லை..! ஏன் இப்ப வந்துருக்கற காச்சல் பத்தலையா..?”


” அயோ.. நான் தப்பா பாக்கலைங்க.. ”


” தொலைங்க.. ! சரி.. தைலம் வச்சிருக்கிங்களா.. ?”


” ம்ம்.. ! இருக்குங்க.. !”


” சரி இருங்க.. நான் போய் கஞ்சி வெச்சு கொண்டு வரேன். அடுப்புல வெச்சிட்டுதான் வந்தேன்.. !”


” இல்ல.. பரவால்லங்க.. ! ரொட்டியே போதும் !”


” வரவரனு இருக்குற ரொட்டி தொண்டைல எறங்காது. பேசாம கஞ்சி குடிங்க.. அதான் சீக்கிரம் குணமாக்கும்.. !! சொன்ன பேச்சு கேக்கலே… அப்பறம் அடி பிண்ணிருவேன் பிண்ணி.. !!” என்று விட்டு மீண்டும் கீழே போனாள் ஆர்த்தி.


No comments:

Post a Comment